மலோசியாவில் ஒரேநாளில் 19,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 19,257 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,43,852ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 210 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 10,389ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 16,323 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,09,343ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 2,24,120 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1,097 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.