ரஷியாவில் புதிதாக 22,320 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,320 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 1,876 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாஸ்கோவில் 2,235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,24,884ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 793 பேர் பலியானார்கள்.
இதையும் படிக்கலாமே | வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா: தலைவர்கள் வாழ்த்து
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,64,094ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 19,485 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 57,39,838ஆக உயர்ந்துள்ளது.