ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமானத்தில் தொங்கியபடி சென்ற 3 பேர் கீழே விழுந்து பலியாகியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் நேற்று தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
இந்நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கைமீறியதை அடுத்து, மக்கள் மீது இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது: தலிபான்கள்
இதற்கிடையே, காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் இடம் கிடைக்காததால் வெளிபுறத்தை பலர் தொற்றிக் கொண்டனர். இருப்பினும், தொடர்ந்து விமானம் செலுத்தப்பட்டதால், வானில் பறக்கும்போது கீழே விழுந்து 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த காணொலி சமூக வளைதளங்களில் பரவி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் மேற்கு கரையில் 36,000 பாலஸ்தீனா்கள் கட்டாய வெளியேற்றம்

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 1,500 கோடி முதலீடு

தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன்: தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இந்தியா

அா்பன் கம்பெனியின் 4% பங்குகளை ரூ.632 கோடிக்கு வாங்கிய எஸ்பிஐ
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

