திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஆப்கானிஸ்தான் விவகாரம்: ஆக. 24ல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய சிறப்புக் கூட்டம்

ஆப்கானிஸ்தானின் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

DIN

ஆப்கானிஸ்தானின் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றியுள்ளனர்.  மேலும் அங்கு ஆட்சியமைப்பதற்கான பணிகளையும்  தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டின் சூழ்நிலை குறித்து உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன. 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் வருகிற ஆகஸ்ட் 24 அன்று ஆப்கானிஸ்தானில் ஒரு சிறப்பு அமர்வை நடத்தவுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் மனித உரிமை மீறல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தில் இந்த சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்படும் இந்த சிறப்பு அமர்வில் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து "தீவிர மனித உரிமை கவலைகள்" என்ற தலைப்பில்  உரையாற்றப்படுகிறது. இந்தக் கோரிக்கையை இதுவரை 89 நாடுகள் ஆதரித்துள்ளன. பெரும்பாலான பிரதிநிதிகள் காணொலி வாயிலாக  உரையாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.