டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெற்றோர் இல்லாமல் சிறுமி மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாரா?: பிரிட்டன் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் பெற்றோர் இல்லாத குழந்தைகளை மீட்கவில்லை என பிரிட்டன் விளக்கம் அளித்துள்ளது.

News image
குழந்தை மீட்கப்படும் காட்சி
Updated On :19 ஆகஸ்ட் 2021, 11:14 am

DIN

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் மேற்கத்திய ராணுவ வீரர்களிடம் பெற்றோர் இன்றி சிறுமி மட்டும் ஒப்படைக்கப்படுவது போன்ற விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், பெற்றோர் இல்லாத குழந்தைகளை மீட்கவில்லை என தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் சுவருக்கு அப்பால் உள்ள மேற்கத்திய ராணுவ வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படுவது போன்ற காட்சிகள் விடியோவில் பதவியாகியுள்ளது.

இதுகுறித்து வாலஸ் மேலும் கூறுகையில், "பெற்றோர் மீட்கப்பட்ட பிறகே சுவருக்கு அப்பால் உள்ள ராணுவ வீரர்களிடம் குழந்தை கொடுக்கப்பட்டது. பெற்றோர் இன்றி வயது வராதோரை அழைத்து செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். அதை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம். 

நாட்டை விட்டு வெளியேற பல ஆப்கன் மக்கள் முயன்றுவருகின்றனர். எனவே, விமான நிலையத்தில் உள்ள பிரிட்டன் ராணுவ வீரர்கள் கடினமான சூழலை சந்தித்துவருகிறோம்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.