கனடாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 18 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30,012-ஆக அதிரித்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 6,942 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,57,999-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.