பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகள் 4 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் ஆப்கன் எல்லையில் அடையாளர் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் 4 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகள் 4 பேர் பலி
பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: காவல்துறை அதிகாரிகள் 4 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் ஆப்கன் எல்லையில் அடையாளர் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் 4 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது கைபர் பக்துன்க்வா. ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள இந்தப் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பகுதியில் காவல் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் அதிகாரிகள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com