பாகிஸ்தான் நாட்டின் ஆப்கன் எல்லையில் அடையாளர் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரிகள் 4 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது கைபர் பக்துன்க்வா. ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள இந்தப் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பகுதியில் காவல் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிக்க | ‘ஆப்கனில் 400க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உள்ளனர்’: அமெரிக்கா
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் அதிகாரிகள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் பலியாகினர்.
இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.