மெக்ஸிகோவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 2.75 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மெக்ஸிகோவில் இதுவரை 1.40 பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | கோவேக்ஸினுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம்?
நேற்று (செப்-27) நிலவரப்படி புதிதாக 3,008 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 36.48 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் உயிரிழந்ததால் இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 2.75 லட்சமாகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் அந்நாட்டில் 6.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் 4.42 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.