இதைக் கண்டித்தும், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரியும் ஏராளமான பொதுமக்கள் பங்கிரிவட்ட லேன் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த தடையை மீறி சாலை விளக்குகள் இல்லாததால் தீப்பந்தங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போராட்டக்காரர்கள் அதிபா் கோத்தபய ராஜபட்சயின் மோசமான நிர்வாகக் குறைபாடு காரணம் எனவும், "பெட்ரோல் வேண்டாம், எரிவாயு வேண்டாம், பால் பவுடர் வேண்டாம், மின்சாரம் வேண்டாம்", "கோத்தபய பதவி விலகி வீட்டுக்கு போ" என்ற பதாகை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு தடுப்புகளைத் தாண்டி அதிபா் இல்லத்தை நோக்கி சென்றதால் கோபமடைந்த போலீஸாா் கண்ணீா்ப் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.