தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இலங்கை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே ராஜிநாமா

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தவிப்பது வேதனையளிப்பதாகக் கூறி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

News image
அமைச்சர் ரோஷன் ரணசிங்கே
Updated On :2 ஏப்ரல் 2022, 7:30 am

DIN


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தவிப்பது வேதனையளிப்பதாகக் கூறி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலகியிருப்பது, இலங்கை அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இந்தளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மே 1 முதல் இலங்கை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகாரங்கள் துறை பொறுப்புகளை வகித்து வரும் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அறிவித்துள்ளார்.

உணவுப் பொருள்களுக்காக இலங்கை மக்கள் வரிசையில் நிற்பது வேதனையளிப்பதாக தனது ராஜிநாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.