47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரஷிய நிறுவனங்களுக்கு எதிராக தடைகளை விதித்தது ஆஸ்திரேலியா

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 14 ரஷிய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:40 am

DIN

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 14 ரஷிய நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 50 நாளைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தாக்கி அழித்துள்ள ரஷியப்படை தரப்பிலும் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

முக்கியமாக உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் மீது ரஷியப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் நகரில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருந்தது

இந்நிலையில், போரைத் தொடுத்த ரஷியா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியிலான தடைகளை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது  14 ரஷிய நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதிப்பதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்துத் தொடர்பான நிறுவனங்களும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.