இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மூடப்படுகிறது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இலங்கை அரசைக் கண்டித்து மக்களின் போராட்டமும் தொடர்ந்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியில் இருந்து வருகிறது. அவ்வப்போது தற்காலிகமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் கொழும்பு பங்குச்சந்தை முதல்முறையாக 5 நாள்களுக்கு மூடப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சரிசெய்ய முதலீட்டாளர்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்காக கொழும்பு பங்குச் சந்தை அடுத்த வாரம் நிறுத்துமாறு இலங்கையின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த வாரம் முழுவதும் அதாவது ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தை மூடப்படுகிறது.
இதையும் படிக்க | இலங்கையில் ‘மருத்துவப் பேரழிவு’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியலில் 129 கிராம் தங்கம், ரூ.7.84 லட்சம் காணிக்கை

பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு

சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

