/

கோத்தபய ராஜபட்சவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் 3 எம்.பி.க்கள்

இலங்கை அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த  3 கோத்தபய ராஜபட்ச ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:01 am

DIN

கொழும்பு: இலங்கை அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த  3 கோத்தபய ராஜபட்ச ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது தீர்மானங்களை அறிவித்து, தற்போதைய ஆட்சிக்கு முன்னர் ஆதரவளித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயேச்சை எம்.பி.க்களாகவே இருப்போம் என்றும் தெரிவித்தனர். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள்.

எவ்வாறாயினும், பிரதான எதிர்க்கட்சிக்கு எதிராக அரசியலமைப்பின் 20-வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.