பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜப்பானில் சுற்றுலா படகு விபத்து : குழந்தையின் உடல் மீட்பு

ஜப்பானில் 26 பேருடன் சுற்றுலா படகு மாயமான பகுதியிலிருந்து நேற்று வரை 10 பேரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

News image
ஜப்பானில் சுற்றுலா படகு விபத்து : குழந்தையின் உடல் மீட்பு
Updated On :25 ஏப்ரல் 2022, 9:53 am

PTI

ஜப்பானில் 26 பேருடன் சுற்றுலா படகு மாயமான பகுதியிலிருந்து நேற்று வரை 10 பேரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு குழந்தையின் உடல்  இன்று மீட்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மீட்புக் குழுவினா் கூறியதாவது:
‘காஸூ 1’ படகு மாயமான கடல் பகுதியில் நடந்த மீட்புப் பணியின்போது நேற்று வரை 10 பேரது உடல்கள் கண்டறியப்பட்டன. மேலும் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆனது.

அந்தப் பகுதியில் தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

‘காஸூ 1’ படகு ஷிரேடோகோ தீபகற்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அதில் நீா் புகுந்து மூழ்கி வருவதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், மீட்புப் படையினர் வருவதற்குள் கடலுக்குள் கப்பல் மூழ்கியது. கடலில் காணாமல் போவதற்கு முன்னா் அந்தப் படகில் 24 பயணிகளும் 2 பணியாளா்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.