ஹாங்காங்கில் இரண்டாவது ஆண்டாக மக்கள்தொகை எண்ணிக்கை சரிந்துள்ளதாக அந்தத் தன்னாட்சிப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நகருக்கு தொழிலாளா்கள் வருவது நின்று போனதாலும், குழந்தை பிறப்பு விகிதம் சரிந்ததாலும் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனினும், சீன அரசின் அடக்குமுறைக்கு அஞ்சி ஏராளமானவா்கள் ஹாங்காங்கை விட்டு வெளியேறியது குறித்து அரசு எதுவும் குறிப்பிடவில்லை.