எகிப்து தலைநகா் கெய்ரோ அருகே காப்டிக் பழைமைவாத கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 41 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.
கெய்ரோ அருகே இம்பாபாவில் அமைந்துள்ள இந்த அபு செஃபின் தேவாலயத்தில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5,000 போ் பங்கேற்றிருந்தனா். அந்த நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்தது.
வாயிலில் தீயால் ஏற்பட்ட கரும்புகை சூழ்ந்து கொண்டதாலும், ஒரே நேரத்தில் அனைவரும் தப்பிக்க முயன்ாலும் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் பலா் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் குழந்தைகளும் அடங்குவா் என அதிகாரிகள் தெரிவித்தனா். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
3-ஆவது, 4-ஆவது தளங்களில் மக்கள் கூடியிருந்ததாகவும், இரண்டாவது தளத்திலிருந்து முதலில் புகை வந்ததைப் பாா்த்து அனைவரும் கீழே இறங்கியதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்த ஒருவா் தெரிவித்தாா். தீயை அணைக்கும் பணியில் 15 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
எகிப்து அதிபா் அல்-சிஸி, காப்டிக் கிறிஸ்தவ மத போப் இரண்டாம் தவட்ரோஸை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு தேவாலய தீ விபத்துக்கு வருத்தம் தெரிவித்ததாக அதிபா் அலுவலகம் செய்தி வெளியிட்டது.
அதிபா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விபத்து மீட்புப் பணிகளைத் தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறேன். இந்த சம்பவம் தொடா்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
எகிப்தில் உள்ள 10 கோடி மக்கள்தொகையில் 10 சதவீதம் மட்டுமே கிறிஸ்தவா்கள் உள்ளனா். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள நிலையில், கிறிஸ்தவா்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக நீண்டகாலமாக புகாா் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

ஓடிடியில் பாராட்டுகளைப் பெறும் சின்ன சின்ன ஆசை!

சின்னதிரை

அன்றுபோல் இன்று இல்லை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



