மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐரோப்பாவை பந்தாடும் புயல், 12 பேர் பலியான பரிதாபம்

ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலினால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, ஜெர்மனிக்கு அதிகனழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2022, 11:34 am

ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலினால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, ஜெர்மனிக்கு அதிகனழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் வீசிய பலத்தக் காற்றினால் மரம் சாய்ந்ததில் 4 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் பலியாகினர். 

இந்த புயல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “புயலினால் 13 பேர் காயமடைந்துள்ளனர். அதில், இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. புயலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சுற்றுலாவிற்காக வருகை புரிந்தவர்கள் ஆவர்.” என்றனர்.

இரு சிறுமிகளின் இறப்பு குறித்து ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டர் பெல்லன் கூறியதாவது: “ இரு சிறுமிகளின் மறைவு மிகுந்த துயரத்தை கொடுத்துள்ளது. ஆஸ்திரியாவின் பல பகுதிகள் போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன.” என்றார்.

அதேபோல ஆஸ்திரியாவில் மரத்தில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் பலியாகினர்.

ஐரோப்பாவின் பல நாடுகளும் புயலின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.