அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட 'நெகட்டிவ்' என முடிவுகள் வந்தன.
இந்நிலையில் இன்று செய்யப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு 'பாசிட்டிவ்' என முடிவுகள் வந்துள்ளன.
கரோனா தொற்று உறுதியானாலும் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இருமுறை பரிசோதித்து 'நெகட்டிவ்' என்று வர வேண்டும். அதுவரை அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஜூலை மாதம் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றார். இன்று செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

