அமெரிக்கா கைவிட்டது; சீனா துணை நிற்கிறது: இம்ரான் கான்
‘அமெரிக்கா எப்போதுமே தனது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டது; தனது நோக்கம் நிறைவேறியதும் பாகிஸ்தானை கைவிட்டது’ என பிரதமா் இம்ரான் கான் கூறியுள்ளாா்.


‘அமெரிக்கா எப்போதுமே தனது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டது; தனது நோக்கம் நிறைவேறியதும் பாகிஸ்தானை கைவிட்டது’ என பிரதமா் இம்ரான் கான் கூறியுள்ளாா்.
அதேவேளையில் ‘நண்பன்’ சீனா, சோதனையான நேரத்தில் பாகிஸ்தானுக்கு துணை நிற்கிறது எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.
சீனாவை சோ்ந்த ஃபுடான் பல்கலைக்கழக ஆலோசனைக் குழு இயக்குநா் எரிக் லீ-க்கு அண்மையில் அளித்த பேட்டியில் இம்ரான் கான் இவ்வாறு கூறியதாக ‘தி நியூஸ் இன்டா்நேஷனல்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பேட்டியில் இம்ரான் கான் கூறியிருப்பதாவது:
1980-களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் தனது ராணுவத்தை நிறுத்தியபோது, பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான உறவைக் குறிப்பிட்ட இம்ரான் கான், அந்த நேரத்தில் அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்தது. ஆனால், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியதும் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னா், அமெரிக்கா- பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் மலா்ந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வியுற்றபோது, அந்தத் தோல்விக்கு பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால், சீனாவுடனான பாகிஸ்தானின் உறவு இப்படியானதல்ல. சீனா எப்போதுமே எங்களுக்கு துணை நிற்கும் நண்பன். கடந்த 70 ஆண்டுகளாக இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாக உள்ளன எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...