தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மடகாஸ்கரில் சூறாவளி புயல்: பலி எண்ணிக்கை 111ஆக உயர்வு

மடகாஸ்கரில் ஏற்பட்ட சூறாவளிப் புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.

News image

மடகாஸ்கரில் சூறாவளி புயல்: பலி எண்ணிக்கை 111ஆக உயர்வு

Updated On :11 பிப்ரவரி 2022, 2:47 pm

மடகாஸ்கரில் ஏற்பட்ட சூறாவளிப் புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.

மடகாஸ்கரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இந்த சூறாவளி புயலில் சிக்கி பல குடியிருப்புகள் சேதமடைந்தன. 

சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. 

30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கியதால் தெற்கு மடகாஸ்கர் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மடகாஸ்கரின் தென்கிழக்கு மாவட்டமான இகோங்கோவில் 87 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.