செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பிரேசில்: மண்சரிவில் சிக்கி 94 பேர் பலி, பலர் மாயம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. 

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 11:59 am IST

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. 

பெட்ரோபோலிஸ் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகள், கார்கள் அனைத்தும் மண்ணில் புதைந்து போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜெர்மனியின் மேயர் ரூபன்ஸ் போம்டெம்போ கூறுகையில், 

இதுவரை காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடமுடியவில்லை. தொடர்ந்து மீட்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளம் ஏற்பட்டு கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தொலைந்துபோனவர்களைக் கண்டுபிடிக்க ஆங்காங்கு தோண்டி வருகின்றனர். 

புதன்கிழமை காலை, வீடுகள் பல சேற்றின் அடியில் சிக்கிய நிலையில், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கார்கள் தெருக்களில் குவிந்தன. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இது ஒரு கடினமான நாள் என்று அவர் தெரிவித்தார். 

ரியோ டி ஜெனிரோவின் அரசு வழக்குரைஞர்கள் அலுவலகம் புதன்கிழமை இரவு ஒரு அறிக்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்படாத 35 பேரின் பட்டியலைத் தொகுத்துள்ளது என்று கூறியது.

தென்கிழக்கு பிரேசில் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்திலும் அதே மாதத்தின் பிற்பகுதியில் சாவ் பாலோ மாநிலத்திலும் கனமழை, மண்சரிவில் சிக்சி பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.