மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்திற்கு பிட்காயின்கள் நன்கொடை

ரஷியப் படைகள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தும் நிலையில் போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடையாளர்கள் பிட்காயினை வழங்கி வருகிறார்கள்.

News image
உக்ரைன் தலைநகர் கிவ்வில் நுழைந்த ரஷியப் படைகள்
Updated On :25 பிப்ரவரி 2022, 6:09 am

DIN

ரஷியப் படைகள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தும் நிலையில் போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடையாளர்கள் பிட்காயினை வழங்கி வருகிறார்கள்.

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை குவித்ததால் எந்த நேரமும் போர்ச் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது. 

அதன்படி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. நேற்று தலைநகர் கீவ் வரை ரஷியப் படைகள் முன்னேறியுள்ளன. அங்குள்ள செர்னோபில் அணு உலையையும் ரஷியப் படை கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இதில் ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்ததுடன் 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார். 

இந்நிலையில், ரஷியா உடனான போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்தினருக்கு நன்கொடையாளர்கள் சிலர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினை வழங்கி வருகிறார்கள்.

இதுவரை 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.3 கோடி)  நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளதாக கிரிப்டோகரன்சி ஆய்வுகளை மேற்கொள்ளும் எலிப்டிக் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உக்ரைனுக்கு ஆதரவானவர்கள் சிலரும் உதவிகளைச் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.