
மணிலா: பிலிப்பைன்ஸில் சனிக்கிழமை புதிதாக 31,173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 36,60,020 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பிலிப்பைன்ஸில் சனிக்கிழமை புதிதாக 31,173 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தென்கிழக்கு ஆசிய நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 36,60,020 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுபாதிப்புக்கு மேலும் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56,351 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகரின் மணிலாவில் தொற்று பாதிப்பு விகிதம் 4 சதவிகிதத்துடன் குறைந்த அளிவிலான பாதிப்புடன் உள்ளதாக பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான டேவிட் கூறினார்.
2020 ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸில் கரோனாவின் நான்காவது அலையை சந்தித்து வருகின்றன. சுமார் 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிலிப்பைன்ஸில், கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தினசரி பாதிப்பு 39,004 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.