உக்ரைனில் போரிட விரும்பும் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அந்நாட்டின் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதனிடையே போரை நிறுத்துவது தொடர்பாக ரஷியா- உக்ரைன் இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
முன்னதாக காணொலியில் பேசிய அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி,
'ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழிறக்க வேண்டும்.
மேலும், உக்ரைனில் போர் தொடரும்பட்சத்தில் ராணுவ அனுபவம் பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவர். மற்ற கைதிகளும் போரிட விரும்பும் பட்சத்தில் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று கூறியுள்ளார்.
இதுவரை 4,500 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 'இந்த பேச்சுவார்த்தை மீது பெரிதாக நம்பிக்கை இல்லை எனினும் போரை நிறுத்த நான் எதுவும் முயற்சிக்கவில்லை என்று என்னுடைய மக்கள் சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்பதால் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், ஃபிராங்கன்ஸ்டைன் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

