750 ஜீப்கள்; 500 பேருந்துகள்: இந்தியாவிடமிருந்து வாங்குகிறது இலங்கை
இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கி இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கி இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:காவல் துறை வாகனங்களை மேம்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து 750 ஜீப்களை வாங்க திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதேபோன்று, 32-35 இருக்கை வசதி கொண்ட 500 பேருந்துகளையும் இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடனுதவி திட்டத்தின் கீழ் இந்தியாவிடமிருந்து இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...