உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் நிறைவு: உகாண்டாவில் பள்ளிகள் திறப்பு

உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில் அது நிறைவு பெற்று, திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் நிறைவு: உகாண்டாவில் பள்ளிகள் திறப்பு
உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் நிறைவு: உகாண்டாவில் பள்ளிகள் திறப்பு


கம்பாலா: உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில் அது நிறைவு பெற்று, திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.

வெகு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பல பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கம்பாலா உள்ளிட்ட நகரப் பகுதிகளில் சாலைகளில் பள்ளி மாணவர்கள் செல்லும் காட்சிகளைக் காண முடிந்தது. 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகளாக உகாண்டாவில் பள்ளிகள் திறக்கப்படவேயில்லை. 

உலகிலேயே மிக நீண்ட பொதுமுடக்கமாக இது பார்க்கப்படுகிறது. அதாவது, உகாண்டாவில் கடந்த 83 வாரங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் சுமார் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com