சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று புதிய உச்சத்தை விரைவில் எட்டக்கூடும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று 692 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே பரவியது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதைப்போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என தொற்றுநோயியல் நிபுணா் அலெக்ஸ் குக் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பது:
சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10,000 முதல் 15,000 வரை விரைவில் அதிகரிக்கக்கூடும். நாட்டில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதைப் பொருத்து அடுத்த அலையின் தீவிரம் இருக்கும் எனக் கூறியுள்ளாா்.
இருப்பினும், அமலில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளைவிட சிங்கப்பூரில் ஒமைக்ரான் பரவல் வேகம் மெதுவாகவே இருக்கும் என வேறு சில நிபுணா்கள் கூறியுள்ளனா்.
60 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிங்கப்பூரில் 90 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். ஒவ்வொரு 10 பேரில் 5 போ் பூஸ்டா் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். அப்படியிருந்தும் ஒமைக்ரான் வகை தொற்று அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

தெற்கு கள்ளிகுளத்தில் மு.அப்பாவு வாக்கு சேகரிப்பு

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம்! - செ.ஜோதிமணி எம்பி

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


