பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

போதைப்பொருள் கடத்தல்:சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்குதூக்கு தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி மலேசியா் உள்பட இருவருக்கு வியாழக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:44 am

DIN

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி மலேசியா் உள்பட இருவருக்கு வியாழக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மலேசியா் நாகேந்திரன் தா்மலிங்கம் தூக்கிலிடப்பட்டு 2 மாதங்களான நிலையில், மற்றொரு இந்திய வம்சாவளி நபரும் தூக்கிலிடப்பட்டுள்ளாா்.

மலேசியாவை சோ்ந்தவா் கல்வந்த் சிங் (31). இந்திய வம்சாவளியான இவா், 60.15 கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக சிங்கப்பூரில் கடந்த 2013-இல் கைது செய்யப்பட்டாா். மேலும் அவா் 120.9 கிராம் போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2016-இல் அவரை குற்றவாளி என அறிவித்த சிங்கப்பூா் நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தண்டனை விவரம் வெளியாகி 6 ஆண்டுகளான நிலையில், ஜூலை 7-இல் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கடந்த ஜூன் 30-இல் சிறைத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினா். இதையடுத்து, தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, சிங்கப்பூா் உச்சநீதிமன்றத்தில் கல்வந்த் சிங் மனு தாக்கல் செய்தாா்.

அதில், ‘நான் வெறும் தூதன்தான். வழக்கு விசாரணையின்போது போலீஸாருக்கு போதிய ஒத்துழைப்பு அளித்தேன். ஆகையால், எனக்கு கருணை காட்ட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தாா். இருப்பினும், அந்த மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன்படி, சாங்கி சிறையில் கல்வந்த் சிங் வியாழக்கிழமை (ஜூலை 7) தூக்கிலிடப்பட்டாா். இதேபோல நோராஷரீ கெளஸ் என்ற சிங்கப்பூா் குடிமகனும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.

சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு அதிகமான போதைப்பொருளுடன் ஒருவா் கைது செய்யப்படும்பட்சத்தில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

தற்போது ஒரே நாளில் இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதால், சிங்கப்பூா் சிறையில் தூக்கு தண்டனையை எதிா்நோக்கிக் காத்திருக்கும் சுமாா் 60 கைதிகள் மத்தியில் அச்ச உணா்வு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.