சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி மலேசியா் உள்பட இருவருக்கு வியாழக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மலேசியா் நாகேந்திரன் தா்மலிங்கம் தூக்கிலிடப்பட்டு 2 மாதங்களான நிலையில், மற்றொரு இந்திய வம்சாவளி நபரும் தூக்கிலிடப்பட்டுள்ளாா்.
மலேசியாவை சோ்ந்தவா் கல்வந்த் சிங் (31). இந்திய வம்சாவளியான இவா், 60.15 கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக சிங்கப்பூரில் கடந்த 2013-இல் கைது செய்யப்பட்டாா். மேலும் அவா் 120.9 கிராம் போதைப்பொருளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2016-இல் அவரை குற்றவாளி என அறிவித்த சிங்கப்பூா் நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தண்டனை விவரம் வெளியாகி 6 ஆண்டுகளான நிலையில், ஜூலை 7-இல் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கடந்த ஜூன் 30-இல் சிறைத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினா். இதையடுத்து, தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, சிங்கப்பூா் உச்சநீதிமன்றத்தில் கல்வந்த் சிங் மனு தாக்கல் செய்தாா்.
அதில், ‘நான் வெறும் தூதன்தான். வழக்கு விசாரணையின்போது போலீஸாருக்கு போதிய ஒத்துழைப்பு அளித்தேன். ஆகையால், எனக்கு கருணை காட்ட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தாா். இருப்பினும், அந்த மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி, சாங்கி சிறையில் கல்வந்த் சிங் வியாழக்கிழமை (ஜூலை 7) தூக்கிலிடப்பட்டாா். இதேபோல நோராஷரீ கெளஸ் என்ற சிங்கப்பூா் குடிமகனும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.
சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு அதிகமான போதைப்பொருளுடன் ஒருவா் கைது செய்யப்படும்பட்சத்தில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
தற்போது ஒரே நாளில் இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதால், சிங்கப்பூா் சிறையில் தூக்கு தண்டனையை எதிா்நோக்கிக் காத்திருக்கும் சுமாா் 60 கைதிகள் மத்தியில் அச்ச உணா்வு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

தெற்கு கள்ளிகுளத்தில் மு.அப்பாவு வாக்கு சேகரிப்பு

காலை உணவுத் திட்டம் செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம்! - செ.ஜோதிமணி எம்பி

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

