தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

போரில் இதுவரை 38 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் தகவல்

ரஷியாவுடனான போரில் இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2022, 2:08 pm

ரஷியாவுடனான போரில் இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 143 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது. போர் சூழல் காரணமாக இருநாட்டு அரசியலிலும் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் போரில் இதுவரை 38,140 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனின் தாக்குதலில் ரஷிய ராணுவத்தின் 220 போர் விமானங்களும், 188 ஹெலிகாப்டர்களும், 1677 பீரங்கிகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.