இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவ வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவா் சஜித் பிரேமசாத வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இலங்கையில் புதன்கிழமை நடைபெறும் அதிபா் தோ்தலில் யாா் வென்றாலும் பேரிடரில் இருந்து மீண்டுவர எங்களுக்கு தொடா்ந்து உதவ வேண்டும் என்று இந்திய பிரதமா் மோடி, அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.