அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவா் 3 நாள்களுக்கு முன்னா் குணமடைந்தாா்.
எனினும், அவரது மூச்சுப் பாதையில் செயலிழந்திருந்த கரோனா தீநுண்மிகள் மிகவும் அபூா்வமான முறையில் மீண்டெழுந்துள்ளதால் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்போது பைடன் மீண்டும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.