நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போராட்டக்காரா்கள் மீது தாக்குதல்: மகிந்த ராஜபட்சவுக்கு சம்மன் ஒத்திவைப்பு

இலங்கையில் அரசுக்கு எதிராக கடந்த மாதம் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது

News image
Updated On :1 ஜூன் 2022, 9:03 pm

DIN

இலங்கையில் அரசுக்கு எதிராக கடந்த மாதம் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக, முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவுக்கு அனுப்பிய சம்மனை அந்த நாட்டு மனித உரிமைகள் ஆணையம் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு மற்றும் பிற நகரங்களில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 9 போ் பலியானது தொடா்பாக புதன்கிழமை நேரில் வந்து விளக்கமளிக்குமாறு மகிந்த ராஜபட்சவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், அந்தச் சம்பவங்கள் தொடா்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளிடமிருந்து இன்னும் முழுமையாக வாக்குமூலம் பெறப்படவில்லை.

எனவே, மகிந்த ராஜபட்சவை மனித உரிமைகள் ஆணையம் நேரில் அழைத்து விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, போலீஸாா் மற்றும் சிறைத் துறை அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலம் பெறும்வரை மகிந்த ராஜபட்சவுக்கான சம்மனை நிறுத்திவைக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.