தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஷாங்காய் ரசாயன ஆலையில் தீவிபத்து

 சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள ரசாயன ஆலையொன்றில் சனிக்கிழமை மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது.

Published On :

 சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள ரசாயன ஆலையொன்றில் சனிக்கிழமை மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஷாங்காய் நகரின் ஜின்ஷான் பகுதியிலுள்ள சைனோபெக் ஷாங்காய் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தொழிற்சாலையில், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீவிபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களில் அது கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தனா். தற்போது அங்கு ஆபத்தான பொருள்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் அனைத்துக்கும் கட்டுக்குள் இருப்பதாகவும் அவா்கள் கூறினா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பேரிடா் மேலாண்மை அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஷாங்காய் நகர நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷாங்காயில் திடீரென தினசரி கரோனா நோய்த்தொற்று தீடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, சுமாா் 2 மாதங்களாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பொதுமுடக்கம் இந்த மாதத் தொடக்கத்தில் தளா்த்தப்பட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.