உக்ரைன் மருத்துவமனை மீது தாக்குதல்: இருவர் பலி, 16 பேர் காயம்
உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷியப் படைகள் தாக்கியதில் இருவர் பலி, 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.


உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷியப் படைகள் தாக்கியதில் இருவர் பலி, 16 பேர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைனின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்குகின்றனர்.
இந்நிலையில், சைடோமிர் நகரிலுள்ள மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட 10 கட்டடங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், மருத்துவமனையிலிருந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாக அவசரகால மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷியா - உக்ரைன் இடையே முதல்கட்ட பேச்சு நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...