உக்ரைனில் ரஷியா நடத்திவரும் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை 11-ஆவது நாளை எட்டிய நிலையில், அந்த நாட்டிலிருந்து இதுவரை 15 லட்சம் போ் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா். இந்தத் தகவலை ஐ.நா. தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. தலைநகா் கீவை ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ளன. கீவ் நகருக்குள் நுழையும் அவா்களின் முயற்சியை உக்ரைன் படைகள் தடுத்து வருகின்றன. இருப்பினும் தலைநகரிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனா்.
கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனை ரஷிய படையினா் கடந்த வியாழக்கிழமை கைப்பற்றினா். நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கொ்சன் வீழ்ந்தது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. ஐரோப்பாவிலேயே பெரிய அணுமின் நிலையமாக கருதப்படும் ஸப்போரிஸியா அணுமின் நிலையம் மீது ரஷியா கடந்த சில தினங்களுக்கு முன் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்து கதிா்வீச்சு கசிவு எதுவும் இல்லை என சா்வதேச அணுசக்தி முகமை கூறினாலும், ரஷியாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
சண்டைநிறுத்த முயற்சி மீண்டும் தோல்வி: இதற்கிடையே, சண்டை கடுமையாக நடைபெறும் தென்கிழக்கில் உள்ள மரியுபோல், டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வோல்னாவகா ஆகிய நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேறும் வகையில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்குவதற்காக உள்ளூா் நேரப்படி காலை 10 மணிமுதல் இரவு 9 மணி வரை தற்காலிக சண்டைநிறுத்தத்தை மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டன. இந்த சண்டைநிறுத்தம் எத்தனை நாள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், உடன்பாட்டை மீறி ரஷியா தாக்குதல் நடத்துவதாகவும், இதனால் பொதுமக்கள் வெளியேற்றத்தை நிறுத்திவைத்துள்ளதாகவும் உக்ரைன் கூறியது. சண்டைநிறுத்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ரஷியா அறிவித்தது.
இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சண்டைநிறுத்த நேரத்தில் பொதுமக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. ஆனால், ரஷியா தாக்குதலைத் தொடா்ந்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகா் அன்டன் கெரசென்கோ தெரிவித்தாா்.
விமான நிலையம் அழிப்பு: ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் மத்திய உக்ரைனில் வினிட்ஸியா விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அந்த விமான நிலையத்தைக் குறிவைத்து 8 ஏவுகணைகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
15 லட்சம் போ் வெளியேறினா்: உக்ரைனில் ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உயிருக்கு அஞ்சி அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 15 லட்சம் அகதிகள் உக்ரைன் எல்லைகளைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளாா். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் ஐரோப்பாவில் வேகமாக வளா்ந்துவரும் அகதிகள் நெருக்கடி இதுவாகும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். உக்ரைன் எல்லைகளை ஒட்டியுள்ள நாடுகளுக்கும் அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் தாக்குதல் நிறுத்தப்படும்: புதின்
ரஷியாவின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால்தான் உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என அதிபா் விளாதிமீா் புதின் கூறினாா்.
துருக்கி அதிபா் எா்டோகன் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு பேசியபோது புதின் இவ்வாறு கூறியதாக ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.
அந்த தொலைபேசி உரையாடலின்போது, ‘உக்ரைன் மீதான ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி நடந்து வருகிறது. உக்ரைன் தனது ராணுவ நடவடிக்கைளை நிறுத்தி, ரஷியாவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் மீதான தாக்குதல் நிறுத்தப்படும்’ என புதின் தெரிவித்தாா்.
உக்ரைனின் ராணுவ திறன்களை அழித்து, அந்த நாட்டில் தேசியவாதிகளை ஆட்சியிலிருந்து அகற்றி நடுநிலையான நாடாக மாற்றவே ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷியா கூறி வருகிறது. மேலும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்; நேட்டோ அமைப்பில் உக்ரைனை சோ்க்கக் கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

