
உக்ரைனில் ரஷிய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷியப் படைகள் 14-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிற நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் விமானப்படை தாக்குதலை ரஷியா மேற்கொள்ளலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தலைநகர் கீவில் சைரன் எச்சரிக்கையும் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.
மேலும், தலைநகரில் வான்வழித் தாக்குதலில் ஈடுபடாத ரஷியப் படைகள் உக்ரைனை கைப்பற்றும் முயற்சியின் அடுத்தகட்டமாக விமானப் படை தாக்குதலைத் தொடங்கலாம் என்பதால் உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.