தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'குழந்தைகள்' என எழுதப்பட்ட திரையரங்கு மீது தாக்குதல்: 'இல்லவே இல்லை' என்கிறது ரஷிய படைகள்

நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.

News image
'குழந்தைகள்' என எழுதப்பட்ட திரையரங்கு மீது தாக்குதல்: 'இல்லவே இல்லை' என்கிறது ரஷிய படைகள்
Updated On :17 மார்ச் 2022, 12:32 pm

PTI


மரியுபோல்: ரஷிய படைகளின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மரியுபோலில் உள்ள திரையரங்கு ஒன்றில், நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட கோர தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் படுகாயமடைந்தனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

மரியுபோல் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், இந்த திரையரங்கு மீது புதன்கிழமை ரஷிய படைகள் கோரத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Story image

தி மேக்ஸர் செயற்கைக்கோள் திங்கள்கிழமை எடுத்த புகைப்படத்தில், இந்த திரையரங்கு கட்டடத்தின் முன்னும் பின்னும், மிகப்பெரிய வெள்ளை எழுத்துக்களால் ரஷிய மொழியில் குழந்தைகள் என்று எழுதப்பட்டிருந்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

உக்ரைனின் மரியுபோல் நகரம்தான், மற்றப் பகுதிகளை விட ரஷிய படையெடுப்பால் உருகுலைந்து போயிருப்பதாகவும், ஏவுகணை மற்றும் குண்டு வீச்சுகளால் இதுவரை 2,300 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், மூன்று வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரினால், ஒரு பக்கம் உயிராபத்துடன், குடிநீர், உணவு மருத்துவ வசதி பெற கடுமையான போராடி வருகிறார்கள்.

ஆனால், இந்தத் தாக்குதலை ரஷிய படைகள் நடத்தவில்லை என்றும், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.