தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தொழிலாளர் பற்றாக்குறை: ரோபோக்களை பணிக்கு நியமித்த உணவகம்

'புட்லி' என்று பெயரிடப்பட்டுள்ள இயந்திரங்கள் தனது முள் போன்ற கைகளால் நூடுஸை அள்ளி வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. 

பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இயந்திரங்கள்

Published On :

ஜப்பானில் உணவகங்களில் பணிபுரிய தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் இயந்திரங்களை (ரோபோ) பணிக்கு நியமனம் செய்து வருகின்றன. 

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளும், தொற்று பரவல் குறித்த அச்சங்களும் நிலவி வருகின்றன. 

அந்தவகையில் ஜப்பானில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், உணவகம், பொதுப்போக்குவரத்து போன்றவற்றில் பெரும்பாலான மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு அச்சம் நிலவி வருகிறது. 

பணியாளர் பற்றாக்குறையை போக்க உணவகங்கள் பரிமாறுவதற்கு ரோபோக்களை நியமித்துள்ளன. அந்தவகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவகம் ஒன்றில் மனித வடிவிலான இயந்திரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

புட்லி என்று பெயரிடப்பட்டுள்ள இயந்திரங்கள் தனது முள் போன்ற கைகளால் நூடுஸை அள்ளி வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பெரும்பாலான இடங்களில் மனிதவளத்திற்கு பதில் இயந்திரங்கள் மூலமே பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. உணவகங்களில் வரவேற்பரைகளில் இயந்திரங்கள் மூலமே கிருமிநாசினி போன்றவை வழங்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.