கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'உலக மக்கள் வீதிகளில் இறங்கி உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' - ஸெலென்ஸ்கி உருக்கம்

உலக மக்கள் அனைவரும் உக்ரைன் நாட்டு மக்களுக்காக போராட முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :24 மார்ச் 2022, 12:44 pm

DIN

உலக மக்கள் அனைவரும் உக்ரைன் நாட்டு மக்களுக்காக போராட முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. உக்ரைனில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ரஷியா தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தான் பேசிய ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் போனில் டைமர் செயலியில் உக்ரைன் வான்வழித் தாக்குதல் சத்தத்தை பதிவு செய்து காட்டி, 'இது 20 நொடிகள் மட்டும்தான். ஆனால், எங்கள் மக்கள் மணிக்கணக்கில், நாள்கள், வாரங்கள் என இந்த சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

ரஷிய ஏவுகணைகள், வெடிகுண்டுகள் போன்றவற்றிலிருந்து எங்கள் மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, முதியவர்களுக்கு உதவி செய்து, வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

உக்ரைனில் 4.4 கோடி மக்கள் இருக்கிறார்கள். ரஷியப் படைகள், உக்ரைனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு நேட்டோ அமைப்பு தடை விதிக்க வேண்டும். உக்ரைன் வான்வழி மூடப்பட வேண்டும். 

உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும். உங்கள் பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள், அலுவலகங்களில், தெருக்களில் இறங்கி அமைதி, சுதந்திரத்தை வலியுறுத்தி உக்ரேனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

ஐரோப்பாவில் அனைத்து மக்களையும் தங்கள் பிடியில் கொண்டு வர வேண்டும் என்று ரஷியா நினைக்கிறது. இதற்கு உக்ரைன் போர் ஓர் ஆரம்பம்தான். மக்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் சுதந்திரத்திற்கு எதிராக ரஷியா செயல்படுகிறது' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.