மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்: அதிர்ந்த விஞ்ஞானிகள்

மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்: அதிர்ந்த விஞ்ஞானிகள்
Updated On :25 மார்ச் 2022, 2:53 pm

DIN

மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எளிதில் மக்காத பொருளாக இருப்பதால் சூழலியலுக்கு அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் உள்ளது. நிலம், கடல் பரப்புகளில் பிளாஸ்டிக் எங்கும் விரவிக் காணப்படுகிறது. 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் உடைய பிளாஸ்டிக்குகள் பொதுவாக மைக்ரோ பிளாஸ்டிக்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் நெதர்லாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தின் பேராசிரியர் டிக் வெத்தாக் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோ பிளாஸ்டிக்குகள் குறித்த விஞ்ஞானிகளின் ஆய்வில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 80 சதவிகிதம் பேரின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இவை ஆய்வகங்களில் சோதனைக்குள்ளாக்கப்படும் மனித உயிரணுக்களில் சேதங்களை உண்டு பண்ணுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மலத்தில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.