உக்ரைனுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது: ரஷியா

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வடக்கு உக்ரைனான கீவ் பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.
விலாதிமீர் மிடின்ஸ்கி (வலது)
விலாதிமீர் மிடின்ஸ்கி (வலது)
Published on
Updated on
1 min read

உக்ரைனுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வடக்கு உக்ரைனான கீவ் பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கியிலுள்ள இஸ்தான்புல் பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷிய தரப்பிலிருந்தும் துருக்கி தரப்பிலிருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய தரப்பு பேச்சுவார்த்தைகான குழுவைச் சேர்ந்த விலாதிமீர் மிடின்ஸ்கி, உக்ரைனுடன் அர்த்தமுள்ள பேச்சு நடைபெற்றது. உக்ரைனின் கோரிக்கைகள் குறித்து அதிபர் விளாதிமீர் புதினுடம் ஆலோசிக்கப்படும் என்று கூறினார். 

உக்ரைன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து 
சர்வதேச ஒப்பந்தத்திற்கு உக்ரைன் அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com