திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உக்ரைனுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது: ரஷியா

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வடக்கு உக்ரைனான கீவ் பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.

News image

விலாதிமீர் மிடின்ஸ்கி (வலது)

Updated On :29 மார்ச் 2022, 8:33 pm IST

உக்ரைனுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமைந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து வடக்கு உக்ரைனான கீவ் பகுதியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் ரஷியா அறிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையே கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. துருக்கியிலுள்ள இஸ்தான்புல் பகுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷிய தரப்பிலிருந்தும் துருக்கி தரப்பிலிருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய தரப்பு பேச்சுவார்த்தைகான குழுவைச் சேர்ந்த விலாதிமீர் மிடின்ஸ்கி, உக்ரைனுடன் அர்த்தமுள்ள பேச்சு நடைபெற்றது. உக்ரைனின் கோரிக்கைகள் குறித்து அதிபர் விளாதிமீர் புதினுடம் ஆலோசிக்கப்படும் என்று கூறினார். 

உக்ரைன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து 
சர்வதேச ஒப்பந்தத்திற்கு உக்ரைன் அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.