மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பழமை வாய்ந்த மரத்திற்கு அருகே நிர்வாண போட்டோ ஷூட்; தம்பதியரை வெளியேற்றும் இந்தோனேசியா

சமூக வலைதள பிரபலமான அலினா ஃபஸ்லீவா, கோயிலுக்கு அருகே உள்ள 700 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தின் மேலே நின்று நிர்வாணமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2022, 1:41 pm IST

இந்தோனேஷியா பாலியில் தபானன் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற கோயிலில் 700 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்திற்கு அருகே நின்று நிர்வாணமாக புகைப்படம் எடுத்து கொண்ட சமூக வலைதள பிரபலமான அலினா ஃபஸ்லீவா, அவரது கணவர் ஆகியோர் பாலியில் இருந்து வெளியேற்றப்படுவர் என உள்ளூர் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

புனிதமாக கருதப்படும் மரத்திற்கு அருகே நிர்வாணமாக புகைப்படம் எடுத்து கொண்டது உள்ளூர் கலாசாரத்திற்கு எதிரானது என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கணவர் ஆண்ட்ரே ஃபஸ்லீவால் எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படத்தை அலினா இன்ஸ்டாகிராமில் பகிர, அது வைரலானது. இது, பாலி இன மக்களை கோபப்படுத்தியுள்ளது.

பாலி இன இந்து கலாசாரத்தின்படி, மலைகள், மரங்கள் மற்றும் பிற இயற்கை வளங்கள் புனிதமாக கருகப்படுகிறது. இயற்கை வளங்களில் கடவுள் இருப்பதாக இம்மக்கள் நம்புகின்றனர். 

இதுகுறித்து பாலி குடியேற்றத்துறை தலைவர் ஜமருலி மணிஹுருக் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கணவன், மனைவி இருவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், உள்ளூர் விதிமுறைகளை மதிக்காத வகையிலும் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். 

அவர்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இந்தோனேசியாவிற்கு வர தடை செய்யப்படுவார்கள். மேலும், உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி புனிதமாக கருதப்படும் பகுதியில் நடைபெறும் தூய்மைப்படுத்தும் விழாவில் அவர்கள் பங்கேற்க வேண்டும்" என்றார்.

நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்ட அலினா, "பாலியில் பல புனிதமாக இடங்கள் உண்டு. அது புனிதமானது என எடுத்துரைக்கும் வகையிலான பலகைகள் வைக்கப்படுவதில்லை. மேலும், இந்த இடங்களையும் மரபுகளையும் மதிப்புடன் நடத்துவது மிகவும் முக்கியம். நான் தவறு செய்துவிட்டேன்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.