உலகம்
உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
இஸ்லாமாபாத்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் பாகிஸ்தானின் அதிகாரபூர்வமான கரோனோ இறப்பு கணக்கை விட 8 மடங்கு அதிகமாக இருப்பது ஏனென பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் காதிர் படேல் கேள்வி
இஸ்லாமாபாத்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் பாகிஸ்தானின் அதிகாரபூர்வமான கரோனோ இறப்பு கணக்கை விட 8 மடங்கு அதிகமாக இருப்பது ஏனென பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் காதிர் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா பாதிதத்த 1.5 மில்லியனில் 30,369 நபர்கள் இறந்ததாக அதிகராப்பூர்வ தகவல் தெரிவித்திருக்கிறது.
"நாங்கள் கரோனா இறப்பு தகவல்களை நேரடியாக சேகரித்து தருகிறோம் இதில் நூறு இருநூறு வித்தியாசம் இருக்கலாமே தவிர மில்லியன் கணக்கில் இருக்காது. உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைமையின் மீது கேள்வி எழுவதாக" அப்துல் காதிர் தெரிவித்தார்.