சீனாவின் ஷாங்காயில் ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்குச் செல்ல கட்டுப்பாடு!

சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
சீனாவின் ஷாங்காயில் ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்குச் செல்ல கட்டுப்பாடு!
Published on
Updated on
1 min read

சீனாவின் ஷாங்காய் நகரில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கரோனா பாதிக்கப்பட்டவர்களும் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஏற்கெனவே பொது இடங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஹோட்டல்களில் இருந்து உணவு டெலிவரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல மக்களும் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. அரசால் அனுமதிக்கப்பட்ட உணவு டெலிவரி மட்டுமே நடைபெறும். 

மேலும், மருத்துவமனைகளில் அவசர நிலைகளைத் தவிர மற்ற அனைவரும் மருத்துவனை செல்ல அனுமதி பெற வேண்டும். 

ஷாங்காய் நகரில் ஏற்கெனவே ஏறத்தாழ அனைத்து சுரங்க ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழாவது வாரமாக ஷாங்காயில் கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com