

இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி காரணமாக பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச கடந்த திங்கள்கிழமை விலகிய நிலையில் இலங்கை பிரதமராக 6 முறையாகப் பதவியேற்றுக்கொண்டார் ரணில் விக்ரமசிங்கே.
மேலும் 15 பேர் அடங்கிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் விக்ரமசிங்கே ஆகியோர் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.