மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலியாகினர்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 9:15 am

DIN

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலியாகினர்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு இன்று காலை வந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்.

இதில், அங்கிருந்த 22 குழந்தைகள் உள்பட 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியைப் விரைந்து பிடிக்க தாய்லாந்து பிரதமர் ஆணை வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, கடந்த 2020 ஆம் ஆண்டு நில விவகாரத்தில் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் ஒருவர் பல்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலியானதோடு 57 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.