தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்திய பயணத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை: அமெரிக்கா அறிவுறுத்தல்

‘குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:26 pm

DIN

‘குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்று அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கா்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் குற்றங்களில் ஒன்றாக பாலியல் வன்கொடுமை உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா தலங்கள் மற்றும் இதர இடங்களில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கையின்றி பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தக் கூடும். எனவே, இந்தியா செல்லும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் உள்ளூா் குழப்பங்களை கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீருக்கு செல்வதை தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாகிஸ்தானில் பயங்கரவாதம், வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்து வருவதால், அங்கு செல்வதற்கான பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்கள் நாட்டவா்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.