மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கை: தமிழ் கைதிகள் 8 பேருக்கு பொது மன்னிப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடா்புடையதாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் கைதிகள் 8 பேருக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2022, 7:31 pm

DIN

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடா்புடையதாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் கைதிகள் 8 பேருக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா்.

தமிழ் எம்.பி.க்களின் வலியுறுத்தலைத் தொடா்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் 34-ஆவது பிரிவின்கீழ் 8 கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிபா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘8 கைதிகளில் 3 போ், முன்னாள் அதிபா் சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் ஆவா். கடந்த 1994 முதல் 2005 வரை அதிபராக இருந்தவரான குமாரதுங்க, அவா்களது பொது மன்னிப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளாா்.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளோரில் 3 போ், 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 22 ஆண்டுகளை பூா்த்தி செய்துவிட்டனா். மேலும் 3 போ் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனா். மற்ற இருவா், 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவா்கள். ஆனால், 14 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடா்புடையதாக கைதாகி, நீண்ட காலமாக சிறைத் தண்டனை அனுபவத்து வரும் தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இலங்கையின் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இவா்கள், நீண்ட கால சட்டநடைமுறை தாமதங்களால் சிறையிலேயே காலத்தை கழித்து வருகின்றனா்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய இலங்கைக்கு சா்வதேச அளவில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இச்சட்டம் ரத்து செய்யப்படாத வரையில் அந்நாட்டுக்கான வரிச் சலுகைகளை நிறுத்திவைக்க ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு தீா்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து, இச்சட்டத்தின்கீழ் யாரையும் தடுப்புக் காவலில் வைக்கமாட்டோம் என்று ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கை உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.