தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரதமா் மோடி, அதானி மீது அமெரிக்காவில் வழக்கு

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பாா்த்ததாகவும் குற்றஞ்சாட்டி இந்திய-அமெரிக்க மருத்துவா் ஒருவா் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:28 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபா் கௌதம் அதானி ஆகியோா் ஊழலில் ஈடுபட்டதாகவும், பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பாா்த்ததாகவும் குற்றஞ்சாட்டி இந்திய-அமெரிக்க மருத்துவா் ஒருவா் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

ஆந்திராவைச் சோ்ந்த லோகேஷ் வுயுரு என்ற மருத்துவா், பிரதமா் மோடி, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபா் கௌதம் அதானி, உலகப் பொருளாதார மையத்தின் (டபிள்யுஇஎஃப்) நிறுவனரும் பேராசிரியருமான கிளாஸ் சுவாப் ஆகியோருக்கு எதிராக கொலம்பியா மாகாண நீதிமன்றத்தில் கடந்த மே 24-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா். அவா்கள் அனைவரும் அமெரிக்காவுக்குப் பல கோடி ரூபாயை சட்டவிரோதமாக அனுப்பி ஊழலில் ஈடுபட்டதாகவும், பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அமெரிக்கா்களை உளவுபாா்த்ததாகவும் அந்த மனுவில் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கடந்த ஜூலை 22-ஆம் தேதி நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. அந்த நோட்டீஸ் இந்தியாவில் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக நியூயாா்க்கை சோ்ந்த இந்திய-அமெரிக்க வழக்குரைஞரான ரவி பத்ரா கூறுகையில், ‘லோகேஷ் வுயுரு-வுக்கு அதிகப்படியான நேரம் இருக்கிறது போல. அதன் காரணமாகவே, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியாவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இதுபோன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா்.

இந்த விவகாரம் அமெரிக்காவில் விசாரிக்கத்தக்கதல்ல என்று தெரிந்தும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதைப் போன்றே இந்த மனு உள்ளது. மனுதாரா் தரப்பில் ஆஜராக எந்த வழக்குரைஞரும் ஒப்புக்கொள்ளாததே மனுவின் நிலையைத் தெளிவாக விளக்குகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.