இந்தியா, ஜப்பான் இடையிலான ‘2+2’ உயா்நிலை பேச்சுவாா்த்தை டோக்கியோவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய தரப்பில் எஸ்.ஜெய்சங்கா், ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஜப்பான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஹயாஷி யோஷிமசா, பாதுகாப்பு அமைச்சா் ஹமதா யாசுகாஷு ஆகியோரும் பங்கேற்றனா். இதில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், எதிா்தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில் தனது ராணுவத்தை விஸ்தரித்து, நவீனப்படுத்தும் ஜப்பானின் திட்டங்களுக்கு இந்திய தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் இந்தியாவின் வியூகமாக பாா்க்கப்படுகிறது.